சென்னை: நான் தங்கியியுள்ளது வீடு அல்ல, அறக்கட்டளை; ஒவ்வொரு மழையின் போதும், கழிவு நீர் சூழ்ந்து கொள்ளும், டெல்லிக்கு அவசரமாக புறப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் இருக்கை மீது ஏறி நடந்தேன் என இருக்கை மீது நடந்து சென்றது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். அவசரமாக புறப்பட்ட போது நான் கீழே விழாமலிருக்க தொண்டர்கள் என்னை பிடித்துக் கொண்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.