×

5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராக ஐ.பி.எஸ். அதிகாரி ஈஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக ஆறுமுகசாமி ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் பயிற்சி கல்லூரி முதல்வராக மணிவண்ணன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  செங்கல்பட்டு காவல் கண்கணிப்பாளராக அரவிந்தன் ஐபிஎஸ்.ஸை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. சென்னை தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு கண்காணிப்பாளராக விஜயகுமார் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.


Tags : Government of Tamil Nadu , IPS Officer, Transfer, Government of Tamil Nadu,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...