சென்னை: சஸ்பெண்ட் செய்யப்பட்ட விமானியை மீண்டும் பணியமர்த்துவது குறித்து உரிய முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி விமான நிலைய சுற்றுசுவரில் விமானம் மோதியதை அடுத்து விமானி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து விமானி கணேஷ் பாபு தாக்கல் செய்த மனு ஏர் இந்தியா முடிவெடுக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.