×

பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள் விடுதியில் சேர விண்ணப்பம் வரவேற்பு: இன்று கடைசி நாள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கான விடுதிகள் செயல்படுகின்றன. மாணவர்களுக்கு 11  மாணவிககளுக்கு 5 விடுதியும் செயல்படுகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ  மாணவிகள் சேர்ந்து படிக்க தகுதி உடையவர்கள். இங்கு அனைத்து வகுப்பு மாணவ/மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். எந்த செலவும் இல்லாமல் உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படும்.

10ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர் பாதுகாவலரது ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து படிக்கு கல்வி நிலையத்தின் தூரம் குறைந்தபட்சம் 8 கிமீக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் காப்பாளினிகளிடம் அல்லது கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பள்ளி விடுதி காப்பாளர் காப்பாளினிகளிடம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தில் வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமான சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழகத்தில் உள்ள அனைத்து விடுதிகளிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Student, Accommodation, Application
× RELATED மே மாதத்தின் முதல் 2 வாரங்களில் ஈரோடு,...