சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலைபற்றிய அரசு நிலைப்பாட்டில் மாற்றமில்லை என தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வழக்கறிஞர் கூறினார். மீண்டும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற தேவையில்லை எனவும் கூறினார். முந்தைய ஆளுநரும், தற்போதைய ஆளுநரும் முடிவெடுக்க தாமதமாவதால் நளினி வழக்கு தொடர்ந்துள்ளார் என தெரிவித்தார்.