டெல்லி: கிரிப்டோ கரன்ஸியான பிட்காயினை இந்தியாவில் ஒரு நாணயமாக அங்கீகரிக்கும் திட்டம் இல்லை என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மக்களவையில் பிட்காயின் தொடர்பான கேள்விகளுக்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். மேலும் இந்தியாவில் பிட்காயினில் நடைபெறும் பணப்பரிவர்தனை தொடர்பான விவரங்களையும் அரசு சேகரிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.