சென்னை: சென்னை வேப்பேரியில் ரூ.2.5 லட்சத்துக்கு விற்கப்பட்ட ஆண் குழந்தை மூலக்கொத்தளம் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. குழந்தை கடத்தல் குறித்து சிவகுமார், இடைத்தரகர் ஜெயகீதா, லதாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சிளம் ஆண் குழந்தையை விற்ற தாயார் யாஸ்மின் பணம் கொள்ளைபோனதாக நாடகமாடியதும் அம்பலமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.