×

தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பேச்சு இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது: கே.எஸ்.அழகிரி பாராட்டு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இமாச்சலபிரதேசத்தில் நடந்த அகில இந்திய சபாநாயகர்களின் 82வது மாநாட்டில் பங்கேற்று மாநில உரிமைகள் குறித்த வலுவான தமிழகத்தின் குரலை தமிழக சபாநாயகர் அப்பாவு ஒலித்திருக்கிறார். அவரது குரல் இந்தியாவில் பல மாநிலங்களில் ஆளும் பா.ஜ. அல்லாத அரசுகளின் குரலாக ஒலித்திருக்கிறது. சபாநாயகர்களின் அதிகாரம் குறித்தும் அதில் மத்திய அரசு, நீதிமன்றங்களின் தலையீட்டினால் ஏற்படும் இடையூறுகள் குறித்தும் தனது கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்.

மாநிலத்தின் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவது, அந்த மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தக்கூடிய செயல் என்பதை தோலுரித்துக் காட்டியிருக்கிறார். மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்தும் மசோதாக்களை கிடப்பில் போடுவதோ, திருப்பி அனுப்புவதோ, அந்த மாநில மக்களின் விருப்பத்துக்கு எதிரானது என்பதை கோடிட்டுக் காட்டியுள்ள சபாநாயகர் அப்பாவு, குறிப்பிட்ட மசோதா ஏன் நிராகரிக்கப்பட்டது என்ற காரணத்தையாவது மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கும் அவரது தைரியமான பேச்சு உண்மையிலேயே வரவேற்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.

Tags : Tamil Nadu ,Legislative ,Assembly ,Speaker ,Appavu ,India ,KS Alagiri , Tamil Nadu Legislative Assembly Speaker Appavu, India, KS Alagiri
× RELATED 7 கட்ட தேர்தல் திருவிழா தொடக்கம் 102...