கரூர்: கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டு வந்த ஜோதிமணி எம்.பி. போராட்டத்தை வாபஸ் பெற்றார். மாற்றுத்திறனானிகளுக்கு உபகரணங்கள் வழங்க விரைவில் முகாம் நடக்கும் என உறுதி தந்ததால் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் நேரில் உறுதி தந்ததை தொடர்ந்து 2 நாளாக நடத்திய தர்ணா திரும்பப்பெற்றார்.