×

சென்னை புளியந்தோப்பு பகுதியில் மழை வெள்ள சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னையில் நேற்று முதல் இடைவிடாது பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில், நேற்று முதல் விட்டுவிட்டு பல்வேறு இடங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது வடசென்னையில் புளியந்தோப்பு பகுதியில் ஆய்வு செய்து வருகிறார்.

மழையால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு மட்டுமின்றி மழைநீர் தேங்காதவாறும், தேங்கக்கூடிய மழைநீரை உடனடியாக அகற்றுவதற்கும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து, சென்னையில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் மாநகராட்சி எவ்வாறான பணிகளை மேற்கொண்டுள்ளது. மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி ஆய்வு மேற்கொண்டுள்ளார். இன்று வடசென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 20 இடங்களில் அவர் ஆய்வு செய்ய உள்ளார்.


Tags : Chief Minister ,Chennai Bulliandopu ,Q. Stalin , Puliyanthoppu, rain flood, Chief Minister MK Stalin
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...