×

தமிழ்நாட்டில் 109 இடங்களில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைப்பு!: தேவைப்பட்டால் மூன்றாவது முறையாக நிதி கோருவோம்...அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். தகவல்..!!

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் தமிழ்நாட்டில் 109 இடங்களில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 25.10.2021 முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்,  37 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 39.34 மி.மீ. ஆகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 118.82 மி.மீட்டரும்,  திருநெல்வேலி மாவட்டத்தில் 80.08 மி.மீட்டரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 76.40 மி.மீட்டரும், விருதுநகர் மாவட்டத்தில் 69.48 மி.மீட்டரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 67.64 மி.மீட்டரும், சிவகங்கை மாவட்டத்தில், 65.26 மி.மீட்டரும். திண்டுக்கல் மாவட்டத்தில், 63.24 மி.மீட்டரும்,  மதுரையில் 60.52 மி.மீட்டரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 46.41 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. மாநிலம் முழுவதும் 3 இடங்களில் அதி கனமழையும், 8 இடங்களில் மிக கனமழையும், 87 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை 01.10.2021 முதல் 26.11.2021 வரை 580.84 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 341.33 மி.மீட்டரை விட 70 சதவீதம் கூடுதல் ஆகும்.

முக்கிய நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் விபரம்:

* மேட்டூர் அணையிலிருந்து 25,194 கன அடியும்,
* பவானிசாகர் அணையிலிருந்து 2,925 கன அடியும்,
* அமராவதி அணையிலிருந்து 5,033 கன அடியும்,
* வைகை அணையிலிருந்து 5,915 கன அடியும்,
* பாபநாசம் அணையிலிருந்து 1676 கன அடியும்,
* பேச்சிப்பாறை அணையிலிருந்து 521 கன அடியும்,
* பரம்பிக்குளம் அணையிலிருந்து 1,588 கன அடியும்,
* திருமூர்த்தி அணையிலிருந்து 907 கன அடியும்,
* செங்குன்றத்திலிருந்து 1,663 கன அடியும்,
* செம்பரம்பாக்கத்திலிருந்து 2,107 கன அடியும்,
* பூண்டியிலிருந்து 4,213 கன அடியும்,
* சோழவரத்திலிருந்து 600 கன அடியும் திறந்து விடப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 25.11.2021 நாளிட்ட அறிக்கையில்,

இன்று (26.11.2021) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தேனி, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில்  இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். 27.11.2021 அன்று காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, இராமநாதபுரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள், செங்கல்பட்டு மாவட்டத்திலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 குழுவும் மீட்பு பணிகளை மேற்கொள்ள நிலை நிறுத்தப்பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோரம்பள்ளம்  ஏரி (5,000 கன அடி) மற்றும் கடம்பா ஏரி (2,000 கன அடி) ஆகியவற்றின் உபரி நீர் வெளியேறியதால், அப்பகுதியின் அருகே உள்ள தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதோடு, குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மாவட்ட நிருவாகம், நீர்வள ஆதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள் இணைந்து வெள்ள நீரை வெளியேற்ற விரைந்து பணியாற்றி வருகின்றனர்.

மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகயில் மழை நீரை வெளியேற்ற 187 அதிக திறன் கொண்ட பம்புகள்  பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மின் பகிர்மான அறையில் சூழ்ந்த வெள்ள நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைக்கு தொடர்ந்து மின்சார வசதி கிடைப்பதை உறுதி செய்ய இரண்டு உயர் அழுத்த ஜெனரேட்டர்கள் வைக்கப்பட்டுள்ளது.  பெரம்பலூர் மாவட்டத்தில், பச்சமலையில் பெய்த கனமழையின் காரணமாக, லாடபுரம் ஏரியின் உபரி நீரால் லாடபுரம் கிராமம் மதுரா சரவணபுரம் பகுதியில் சிறு பாலம் மூழ்கியதோடு, 8 வீடுகள் வெள்ள நீர் சூழ்ந்தது.  எனவே இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூரில் பெய்த கனமழையின் காரணமாக, விஜயபுரம் அரசு பொது மருத்துவமனையில், வெள்ள நீர் புகுந்ததால், உள்நோயாளிகளை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.  மழை நீரை வெளியேற்ற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாஞ்சோலை பகுதியில் 20 செ.மீ. மழை பெய்துள்ளதால் பாபநாசம் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் 20000 கன அடி உபரி நீர் திறந்துவிட வாய்ப்புள்ளதாகவும், தகுந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நிவாரண முகாம்கள்:

செங்கல்பட்டு, திண்டுக்கல், காஞ்சிபுரம், பெரம்பலூர், புதுக்கோட்டை. இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவண்ணாமலை, வேலூர். தூத்துக்குடி மாவட்டங்களில் மொத்தம் 109 முகாம்களில், 9903 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 620 நபர்கள் 5 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 749 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

* செங்கல்பட்டு மாவட்டத்தில், 332 நபர்கள் 4 நிவாரண முகாம்களிலும்,
* திருவள்ளூர் மாவட்டத்தில், 153 நபர்கள் 1 நிவாரண முகாமிலும்,
* காஞ்சிபுரம் மாவட்டத்தில், 14 நபர்கள் 1 நிவாரண முகாமிலும்,
* பெரம்பலூர் மாவட்டத்தில், 86 நபர்கள் 6 நிவாரண முகாம்களிலும்,
* புதுக்கோட்டை மாவட்டத்தில், 75 நபர்கள் 4 நிவாரண முகாம்களிலும்,
* இராணிப்பேட்டை மாவட்டத்தில், 1373 நபர்கள் 9 நிவாரண முகாம்களிலும்,
* திருப்பத்தூர் மாவட்டத்தில், 2951 நபர்கள், 26 நிவாரண முகாம்களிலும்,
* திருவண்ணாமலை மாவட்டத்தில், 112 நபர்கள் 5 நிவாரண முகாம்களிலும்,
* வேலூர் மாவட்டத்தில், 3914 நபர்கள் 38 நிவாரண முகாம்களிலும்,
* திண்டுக்கல் மாவட்டத்தில், 155 நபர்கள், 1 நிவாரண முகாமிலும்,
* தூத்துக்குடி மாவட்டத்தில், 639 நபர்கள் 14 நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்:

* கடந்த 24 மணி நேரத்தில், அரியலூர் (1), திண்டுக்கல் (1), சிவகங்கை (1), திருவண்ணாமலை (2) மாவட்டங்களில் 5 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
* 152 கால்நடை இறப்பு பதிவாகியுள்ளது.
* 637 குடிசைகள் பகுதியாகவும், 44 குடிசைகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 681 குடிசைகளும், 120 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி:

* மழை நீர் தேங்கியுள்ள 59 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர், இராட்சத பம்புகள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.

* சாலைகளில் விழுந்த 5 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 12444 மருத்துவ முகாம்கள் மூலம் 4,30,563 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

* மழை நீர் சூழ்ந்த பகுதிகளில், மழை நீரை வெளியேற்ற 46 யிசிஙி-களும், 847 அதிக திறன் கொண்ட பம்புகளும் தயார் நிலையில் உள்ளன.

* 33,100 புகார்கள் வரப்பெற்று, 32,277 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது.  எஞ்சிய புகார்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 1070, மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

* 1070-ல் இதுவரை 5389 புகார்கள் பெறப்பட்டு 4976 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது.

* மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077-ல் இதுவரை 4164 புகார்கள் பெறப்பட்டு, 3963 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது.

* பொதுமக்கள் ஜிழிஷிவிகிஸிஜி இணையதளத்திலும், வாட்ஸ் அப் எண் 9445869848 மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம். வாட்ஸ் அப் மூலம் பெறப்பட்ட 274 புகார்களில், 151 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வெள்ள நிவாரணமாக ரூ.4,625.80 கோடி ஒன்றிய குழுவிடம் கோரப்பட்டுள்ளது. இரு தவணைகளாக நிதி வழங்குமாறு ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கையால் தான் ஒன்றிய குழு உடனடியாக வந்து ஆய்வு மேற்கொண்டது. தமிழகத்தில் கனமழை நீடிப்பதால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்  என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களது ஆய்வின் போது, கூடுதல் தலைமைச் செயலர் /வருவாய் நிருவாக ஆணையர் திரு. பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் திரு. குமார் ஜெயந்த், இ.ஆ.ப., பேரிடர் மேலாண்மை இயக்குநர் டாக்டர் என். சுப்பையன், இ.ஆ.ப., மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Tamil Nadu ,Minister ,KKSSR , Tamil Nadu, Flood Relief Camp, Minister KKSSR
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...