×

உஷார் மக்களே: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று முதல் நவ. 29 வரை ரெட் அலர்ட்...இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!!

டெல்லி: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 29 வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழக கடலோர பகுதிகளில் வடகிழக்கு திசையை நோக்கி வரும் புயல் சின்னமாக தமிழ்நாட்டில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இன்றைய தினம் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரத்தில் கனமழை பெய்யும். இதேபோல் நாமக்கல், கரூர், திருவள்ளூர், கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி 27 செ.மீ.,  திருச்செந்தூர் 25 செ.மீ., நாகை  19, ஸ்ரீவைகுண்டம் 18, குலசேகரப்பட்டினம் 16, வைப்பாறில் 15 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. காரைக்கால், திருவையாறு, சாத்தான்குளம், ஓட்டப்பிடாரம், பெலந்துறையில் தலா 12 செ.மீ. மழை பெய்தது.

திருபுவனம், ஸ்ரீமுஷ்ணம், சாத்தூர், பேராவூரணி, லெப்பை குடிகாடு, பாளையங்கோட்டையில் தலா 11 செ.மீ. மழை பொழிந்தது. தொடர்ந்து திண்டுக்கல், திருவாரூர், பூதலூர், அகரம் சீகூர், வெப்பக்கோட்டை, சிவகங்கையில் 10 செ.மீ. மழை பெய்தது. தாம்பரம், மணிமுத்தாறு, நன்னிலம், காட்டுக்குப்பம், செப்பரம்பாக்கம், கடம்பூர், மணியாச்சியில் தலா 9 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் அதிக கனமழை இருக்கும் மாவட்டங்களாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 29 வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி தெற்கு அந்தமான் கடலோரப் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Tags : O Ushar ,Tamil Nadu ,Indian Weather Center , Southwest Bay of Bengal, Tamil Nadu, Nov. 29, Red Alert
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...