×

நடிகையை ஏமாற்றிய வழக்கு: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சம்மன்

சென்னை: நடிகை அளித்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்குசைதாபேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகை சாந்தினி கடந்த மே மாதம் புகார் அளித்திருந்தார். இந்த புகாரில் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளார்.

சைதாப்பேட்டை 9வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், மணிகண்டனுக்கு எதிராக 341 பக்க குற்றபத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்தது. அதுதொடர்பான வழக்கு நீதிபதி மோகனாம்பாள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணைக்கு ஜனவரி 4ம் தேதி  ஆஜராகும்படி முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

Tags : AIADMK ,former ,minister ,Manikandan , AIADMK, Former Minister, Manikandan, Summoned
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...