×

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு: பெண் எஸ்பியின் டிரைவர் கன்மேன் சாட்சியம்

விழுப்புரம்: பணியில்  இருந்த பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, தமிழக முன்னாள்  சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி, எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம்  சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை  விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் பெண் எஸ்பி  மற்றும் அப்போதைய திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயா ஆகியோர் சாட்சியம் அளித்துள்ளனர்.

இதையடுத்து நேற்று நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு  வந்தது. அப்போது, பாலியல் சீண்டல் சம்பவத்தின்போது பெண் எஸ்பியின் கார் டிரைவரான பெரம்பலூர்  மாவட்ட காவல்துறை ஏட்டு பாலமுருகன், கன்மேன் ஆயுதப்படை போலீஸ்காரர்  சந்திரசேகரன் ஆகியோர் ஆஜராகி சுமார் 3  மணிநேரம் சாட்சியம் அளித்துவிட்டுச் சென்றனர். இதனிடையே, எதிர்தரப்பினர்  பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் குறுக்கு விசாரணை நடத்தகோரியதன் பேரில்,  வரும் டிசம்பர் 1ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, அன்று  பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.


Tags : DGP ,Gunman , Special DGP, sex case
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...