×

5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; தொடர்மழையால் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! 3 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை: தொடர் கனமழையால் தமிழகத்தின் 7 மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(நவ.26)  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. மேலும் 4 நாள்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிக பலத்த மழை பெய்யும் என்று 5 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை முதல் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மழையின் தீவிரத்தால் நாளை (நவ.26) திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருக்கிறார்கள். மேலும் மதுரை, ராமநாதபுரம், திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

Tags : Red Alert for 5 districts; Holidays for schools and colleges in 4 districts due to continuous rain! Holidays for schools in District 3
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...