கள்ளக்குறிச்சி: பருவமழையால் சேதமடைந்த சாலைகள், மேம்பாலங்களை சீரமைக்க ரூ.1443 கோடி ஒதுக்க முதலமைச்சரிடம் அமைச்சர் எ.வ.வேலு வேண்டுகோள் விடுத்துள்ளார். முதற்கட்டமாக ரூ.1152 கோடி ஒதுக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருப்பதாக கள்ளக்குறிச்சியில் மணிமுத்தா அணையில் இருந்து பாசனத்துக்காக நீரை திறந்து வைத்து பொதுப்பணித்துறை அமைச்சர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.