×

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27,936 பேருக்கு கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 31,223 பேர் வீடு திரும்பினர்: சென்னை, கோவையில் தொடர்ந்து குறையும் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27,936 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த 31,223 பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் சென்னையில் 2,596  பேர், கோவையில் 3,488 பேர் என தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,63,672 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 27,936 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நேற்று கோவையில் மட்டும் 3,488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,96,516 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 15,766 பேர் ஆண்கள், பெண்கள் 12,170  பேர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 31,223 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில்  சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3,01,781 ஆக  உள்ளது. இந்த எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று மட்டும் 478 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 220 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 258 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்கள். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 24,232 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நேற்றைய மொத்த பாதிப்பில் அரியலூர் 268, சென்னையில் 2,596 பேர், செங்கல்பட்டு 1,138, கோவை 3488, கடலூர் 683, தர்மபுரி 340, திண்டுக்கல் 323, ஈரோடு 1,742, கள்ளக்குறிச்சி 370, காஞ்சிபுரம் 596, கன்னியாகுமரி 908, கரூர் 467, கிருஷ்ணகிரி 455, மதுரை 695, நாகப்பட்டினம் 717, நாமக்கல் 983, நீலகிரி 587, பெரம்பலூர் 224, புதுக்கோட்டை 334, ராமநாதபுரம் 277, ராணிப்பேட்டை  408, சேலம் 1,157, சிவகங்கை 181, தென்காசி 288, தஞ்சாவூர் 780, தேனி 514, திருப்பத்தூர் 391, திருவள்ளூர் 865, திருவண்ணாமலை 488, திருவாரூர் 565, தூத்துக்குடி 590, நெல்லை 394, திருப்பூர் 1,373, திருச்சி 1,119, வேலூர் 407, விழுப்புரம் 639, விருதுநகர் 586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 27,934 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27,936 பேருக்கு கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 31,223 பேர் வீடு திரும்பினர்: சென்னை, கோவையில் தொடர்ந்து குறையும் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Corona ,Hospital ,Chennai ,Tema ,Corona Hospital ,
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...