சென்னை: நூல் விலை உயர்ந்து வருவதாக எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அறிக்கைக்கு அமைச்சர் ஆர்.காந்தி பதிலுரையில் விளக்கம் அளித்துள்ளார். கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் நலனுக்காக, வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். கைத்தறி நெசவாளர்களின் நெசவுக்கான அடிப்படை கூலியில் 10%-ம் அகவிலைப்படி 10%-ம் உயர்த்தி வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.