சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய ரூ.4,626 கோடி வழங்க ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஏற்கனவே ரூ.2,629 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது ஒன்றிய குழு ஆய்வுக்கு பின்னர், ரூ.4,626 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.