சென்னை: தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் முடங்கி கிடந்த 120 உழவர் சந்தைகளை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கனமழையால் தக்காளி அதிகம் விளையும் ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என தக்காளி விலை உயர்வு குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.