×

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றிக் கறி சாப்பிட தடை விதிக்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது!: பிசிசிஐ மறுப்பு

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கறி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை கான்பூரில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கான உணவு பட்டியலை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் வெளியிட்டிருந்தது. அதன்படி மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கறி உணவு வகைகளை எந்த உணவு வடிவிலும் உட்கொள்ளக்கூடாது என்றும் அசைவ உணவுகளில் ஹலால் உணவுகளை மட்டுமே சேர்த்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்திய அணி வீரர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள உணவுப் பட்டியலில், கோழி இறைச்சியும், ஆட்டு இறைச்சியும் மட்டுமே அசைவ உணவுகளாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், மறுபுறம் எதிரணியான நியூசிலாந்து அணி நிர்வாகம், தங்களது உணவுப் பட்டியலில்  மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கறி கட்டாயம் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. பிசிசிஐ-யின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பின. இதனிடையே இதற்கு விளக்கம் அளித்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம், இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றிக் கறி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக  வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என விளக்கம் அளித்துள்ளது.


Tags : BCCI , Indian cricket team players, beef, BCCI
× RELATED அணியின் நலனுக்காக புதிய...