×

வீடு புகுந்து திருடியவருக்கு தர்மஅடி

சென்னை: மயிலாப்பூர் நொச்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் நிர்மல்குமார் (28), பொறியாளரான இவர், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று அதிகாலை நிர்மல்குமார் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்பபோது, இவரது வீட்டில் பொருட்கள் விழும் சத்தம் கேட்டுள்ளது. திடுக்கிட்டு எழுந்தபோது வாலிபர் ஒருவர், வீட்டிற்குள் புகுந்து செல்போன் மற்றும் பொருட்களை திருடி கொண்டிருந்தார். இதை பார்த்த நிர்மல்குமார் கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கொள்ளையனை சுற்றி வளைத்து பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவலறிந்து வந்த மெரினா போலீசார், பொதுமக்களிடம் இருந்து கொள்ளையனை மீட்டனர். விசாரணையில், கொருக்குப்பேட்டையை சேர்ந்த சந்தோஷ் (20) என்பதும், இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்து 5 செல்போன்கள், பட்டாக்கத்தி, ரூ.2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Tags : Dharmaadi , Dharmaadi to the person who broke into the house
× RELATED ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருந்த...