கோத்தகிரி: நீலகிரி மாவட்ட கோத்தகிரி அருகே மிஷன் காம்ப்பவுண்ட் பகுதியில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தனியார் மருத்துவமனை வளாகத்தில் கரடி ஒன்று புகுந்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த மருத்துவமனை வளாகத்துக்குள் நேற்று முன்தினம் கரடி உலா வந்துள்ளது.
அந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இது தொடர்பான வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால் பொதுமக்கள், நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர். கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.