டெல்லி: குளிர்கால கூட்டத் தொடரில் கிரிப்டோ கரன்சி ஒழுங்கு முறை மசோதாவை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்யவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் நாணயம், கிரிப்டோ கரன்சி ஒழுங்குமுறை மசோதாவை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளை இந்தியாவில் தடை செய்யவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.