உதகை: கொடநாடு கொலை வழக்கில் வாளையார் மனோஜ்-க்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கிஉள்ளது. உதகையை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது, வாரந்தோறும் திங்கள் கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர். இந்த வழக்கில் 2-வது குற்றவாளியாக கருதப்படும் மனோஜ் குன்னுர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.