மதுரை: பெரியார் வைகை நீர் பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பை 2 வாரத்தில் அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற தவறும் பட்சத்தில் மதுரை ஆட்சியர் நேரில் ஆஜராக நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஐகோர்ட்டில் தேங்கிய நீரை அகற்ற கூறியும் இதுவரை ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.