×

துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி

உளுந்தூர்பேட்டை: விழுப்புரம் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட 3 பேர் இறந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த வீரபெருமாநல்லூர் கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த விஜி (30), மாரியம்மாள் (45), சுப்பிரமணி (55), மணிகண்டன் (45), சுசீலா (55), ரங்நாதன் (55), சரோஜா (40) உள்ளிட்ட 25 பேர் ஒரு சரக்கு வாகனத்தில் நேற்று மதியம் சென்றனர்.

இதை ஏழுமலை (40) என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது பெரியசெவலை அடுத்த ஆமூர்குப்பம் செல்லும் சாலையின் அருகே பைக் ஒன்று சரக்கு வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்தது. அந்த பைக்கை செந்தில் (41) என்பவர் ஓட்டினார். அவரது மனைவி உமா பின்புறம் அமர்ந்து சென்றுள்ளார். அப்போது சரக்கு வாகனம் டிரைவர் அதிவேகமாக சென்று பைக்கில் மோதிவிட்டு பிரேக் போட்டுள்ளார். இதனால் சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அண்ணாமலை மனைவி தேன்மொழி (50) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பைக்கில் சென்ற தம்பதி உள்பட 25 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு 5 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லட்சுமணன் (45), சேட்டு (எ) சேகர் (50) ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் சேகர் மனைவி பத்மாவதி (40) என்பவர் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவ்விபத்து சம்பவத்தால் கடலூர் - சித்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Accident
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...