சென்னை: பொறியியல் படிப்பை மாணவர்கள் தாய்மொழியான தமிழ் வழியில் கற்பதன் மூலம் நன்றாக உள்வாங்கி படிக்க முடியும். அது வருங்காலத்தில் மாணவர்களை தொழில் நிபுணர்கள் ஆக்குவதற்கு வழிவகுக்கும் என அண்ணாபல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் கூறியுள்ளார். மேலும் ஜெர்மனி, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளில் தாய் மொழியில் பொறியியல் போன்ற தொழில்நுட்ப படிப்புகளை படிப்பதாகவும் அவர் கூறினார்.