×

சென்னையில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து காங்., மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார் கே.எஸ். அழகிரி..!!

சென்னை: ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை சென்னை ஆதம்பாக்கத்தில் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடந்த இந்த பிரச்சார பயணத்தில் சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வேலையின்மை, விலைவாசி உயர்வை கண்டித்து துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கினர். கதர் குல்லா அணிந்து, கையில் மூவர்ண கொடி பதாகைகளை ஏந்தியவாறு தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதில் பேசிய காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, நடக்க இருக்கும் 5 மாநில தேர்தல்களை மனதில் கொண்டு தான் மோடி அரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதாக தெரிவித்தார். மேலும் இது சந்தர்ப்பவாத அரசியல் என்றும் அவர் விமர்சித்தார். அதனை தொடர்ந்து பிரச்சாரத்தில் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உரையாற்றினார். அப்போது, இந்தியாவில் சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார் எனவும் நகராட்சி தேர்தலிலும் திமுக கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்றும் தெரிவித்தார்.


Tags : Chennai, KS ,BJP government , Chennai, Union BJP, Campaign, K.S. azhagiri
× RELATED தேர்தல் பத்திரம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்