திருச்சி: திருச்சி சரகத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் ஆடு திருட்டு வழக்குகள் குறித்து விசாரிக்க சிறப்பு அதிரடிப் படை அமைக்கப்பட்டுள்ளது என திருச்சி சரக டி.ஐ.ஜி சரவணசுந்தர் தெரிவித்துள்ளார். புகார் அளிக்க வருபவர்களுக்கும் வழக்குகள் பதிந்து ஆடுகள் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.