திண்டுக்கல் : கொடைக்கானலில் நிரந்தர கட்டட அமைப்பு இல்லாமல் கூடாரம் அமைத்து தங்கும் டென்ட் ஹவுஸ், கன்டெய்னர் ஹவுஸ்களில் சுற்றுலா பயணிகளை தங்க வைக்க அரசு தடை விதித்துள்ளது. அரசின் தடையை மீறி டென்ட் ஹவுஸ் அமைத்து சுற்றுலா பயணிகளை தங்க வைத்தால் நில உரிமையாளர்கள், டெண்ட் அமைப்பவர்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.