×

சிறுமி பலாத்கார வழக்கு: வாலிபருக்கு சாகும் வரை சிறை: புதுகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

புதுக்கோட்டை: குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு, சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கங்காணிப்பட்டி அருகே பரவா மதுரையை சேர்ந்தவர் ராஜ்குமார்(34). கூலித்தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் ராஜ்குமார், 11ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து சிறுமியை மிரட்டி கருவை கலைக்க ராஜ்குமார் முயற்சித்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, 2020 மார்ச் 7ம் தேதி கொடுத்த புகாரின்பேரில் கீரனூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து ராஜ்குமாரை கைது செய்தனர்.  இந்த வழக்கை புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சத்யா விசாரித்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராஜ்குமாருக்கு இயற்கை மரணம் ஏற்படும் வரை ஆயுள் தண்டனையும், 75 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார். தற்போது, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 4 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. மேலும் 1.50 லட்சம் வழங்கிடவும் நீதிபதி உத்தரவிட்டார்.


Tags : Pudukai Women's Court , Girl, Rape Case, Prison, Women's Court, Judgment
× RELATED பாஜ – விசிக மோதல்: 2 பேர் மண்டை உடைப்பு