×

பாமக கண்டன ஆர்ப்பாட்டம்

திருக்கழுக்குன்றம், நவ. 23: ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை இழிவாக சித்தரிக்கபட்டுள்ளதாக கூறி, திருக்கழுக்குன்றம் பஸ் நிலையத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் ஜெய்பீம் திரைப்படத்தையும் திரை பட குழுவினரையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பாமக மாவட்ட செயலாளர் காரணை ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை பொது செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான திருக்கச்சூர் ஆறுமுகம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மாநில வன்னியர் சங்க துணை தலைவர் கணேசமூர்த்தி, பாமக மாநில அமைப்பு துணை செயலாளர் ஏகாம்பரம், மாவட்ட துணை செயலாளர்கள் நடராஜன், நைனியப்பன், கணேஷ்குமார், திருக்கழுக்குன்றம் நகர செயலாளர் துரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டனர்.

Tags : Pamaka protest , pmk , demonstration
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...