×

திருவேற்காடு, அயப்பாக்கத்தில் வீடு, கடைகளில் துணிகர கொள்ளை

பூந்தமல்லி: திருவேற்காடு மாதிராவேடு பகுதியை சேர்ந்தவர் தாமரைசெல்வன்(54). அதே பகுதியில் பல ஆண்டுகளாக கேட்டரிங் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நாகப்பட்டினம் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 15 சவரன் நகை, 45 ஆயிரம், 1.50 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளைபோனது தெரியவந்தது. புகாரின்பேரில் திருவேற்காடு விசாரிக்கின்றனர்.

ஆவடி: அயப்பாக்கம் ஸ்ரீகணேஷ் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீராம்(47). கடந்த 18ம் தேதி இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார். மறுநாள் காலை வந்தார். அப்போது கடையின் ஷட்டரை உடைத்து கல்லாவில் இருந்த 20 ஆயிரம் கொள்ளைபோயிருந்தது. இதேபோல், இந்த கடையின் அருகில் உள்ள டீக்கடையை உடைத்து 2 ஆயிரம் கொள்ளைபோனது. இந்த இரு கொள்ளைச் சம்பவங்கள் குறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பத்தூர் மங்களாபுரம் குள்ளன் தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார்(21), அதே பகுதி புதூர் மற்றும் அன்னை சத்யா நகரை சேர்ந்த 17 வயதுடைய 2 சிறுவர்கள் ஆகியோரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Thiruverkadu, Ayappakkam , Thiruverkadu, robbery
× RELATED மதுரையில் வாலிபர் வெட்டிக் கொலை