×

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் மேலும் 1.27 லட்சம் பேர் பாதிப்பு; 2,795 பேர் உயிரிழப்பு, 2,55,287பேர் டிஸ்சார்ஜ்

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2,795 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 1,27,510 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  2,81,75,044 ஆக உயர்ந்தது.
* புதிதாக 2,795  பேர் உயிரிழந்துள்ளனர்.
* இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,31,895  ஆக உயர்ந்துள்ளது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,55,287 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,59,47,629 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 18,95,520 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* இதன் மூலம், நாட்டின் இதுவரை 21,60,46,638 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் மேலும் 1.27 லட்சம் பேர் பாதிப்பு; 2,795 பேர் உயிரிழப்பு, 2,55,287பேர் டிஸ்சார்ஜ் appeared first on Dinakaran.

Tags : Corona ,India ,Delhi ,Dinakaran ,
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...