×

பெட்ரோல், டீசல் விலை குறைக்க கோரி தமிழக பாஜ சார்பில் வரும் 3ம்தேதி வரை ஆர்ப்பாட்டம்

சென்னை: பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி மாவட்ட அளவில் பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் வரும் 3ம்தேதி வரை நடைபெறுகிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசு டீசலுக்கு ரூ.10ம், பெட்ரோலுக்கு ரூ.5ம் குறைத்தது. அதே சமயம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அவர்களது மாநில அளவிலான வாட் வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை தங்கள் பங்கிற்கு குறைத்துள்ளது. எனவே தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலை மற்றும் காஸ் சிலிண்டர் விலையை குறைக்க கோரியும் தமிழக பாஜ சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற உள்ளது.

அதன்படி, இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம், மகளிர் அணி தலைவர் மீனாட்சி ஆகியோர் ஒருங்கிணைப்பில் மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டங்கள் இன்று நடைபெறுகிறது. 26ம் தேதி தமிழகம் முழுவதும் மாட்டு வண்டி பயண ஆர்ப்பாட்டம் நடக்கிறது. 27ம் தேதி முக்கிய பிரமுகர்களை சந்தித்து கோரிக்கையின் நியாயத்தை விளக்குதல், 28ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்கள் என வரும் 3ம்தேதி வரை நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu BJP , Manifestación en nombre de Tamil Nadu BJP exigiendo la reducción de los precios de la gasolina y el diésel hasta el 3
× RELATED தமிழ்நாடு பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மாநில தலைவர் அண்ணாமலை!