சென்னை: தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் உள்ள மணலில் கார்னட், இலுமினைட், மோனசைட் அரியவகை கனிமங்கள் உள்ளன என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தாமிரபரணி ஆற்று மணலில் தாதுக்கள் இருப்பதால் அந்த இடத்தை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் எடுக்கலாம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.