சென்னை: ஒரு ஆசிரியர் செய்யும் தவறால் மற்றவர்களும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது, புகார் தெரிவிக்கும் பட்சத்தில் மாணவர்களின் பக்கம் அரசு துணைநிற்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்தார். மாணவ, மாணவிகள் எந்தவித தயக்கமும் இன்றி பாலியல் புகார்களை அளிக்கலாம், புகார் அளிப்பவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும் என கூறினார். போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு நடத்த அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.