×

பூந்தமல்லி அருகே மனைவியை கொன்று தப்பிய கணவன் கோவையில் கைது

பூந்தமல்லி:  பண்ருட்டியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (30). இவரது மனைவி நந்தினி (27). தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன் குடும்பத்துடன் சென்னை வந்த ஆனந்தராஜ், பூந்தமல்லி கிழக்கு மாட வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மனைவி நந்தினியை தாலியால் கழுத்தை இறுக்கியும், கட்டையால் தாக்கியும் கொலை செய்து விட்டு, 3 குழந்தைகளுடன் ஆனந்தராஜ் தலைமறைவானார். இதுகுறித்து பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து கோயம்புத்தூரில் பதுங்கியிருந்த அவரை கைது செய்து பூந்தமல்லி அழைத்து வந்தனர்.

விசாரணையில், ஆனந்தராஜ் பண்ருட்டியில் இருந்தபோது ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த பெண் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக ஆனந்தராஜ், அவரது மனைவி நந்தினி மற்றும் ஆனந்தராஜின் தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில், ஆனந்தராஜின் தாயை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து, போலீசில் இருந்து தப்பிக்க ஆனந்தராஜ் குடும்பத்துடன் பூந்தமல்லி வந்து வாடகை வீட்டில் வசித்து வந்தது தெரியவந்தது. மேலும் அந்த பெண்ணின் தற்கொலைக்கு மனைவி நந்தினி தான் காரணம் என்று கூறி ஆனந்தராஜ் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, கட்டையால் அடித்தும், தாலியால் கழுத்தை இறுக்கியும் மனைவியை கொலை செய்துவிட்டு 3 குழந்தைகளுடன் தலைமறைவானது  தெரியவந்தது. போலீசார் ஆனந்தராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Poonamallee , Esposo arrestado por matar a su esposa cerca de Poonamallee
× RELATED பூந்தமல்லி ஒன்றிய குழு கூட்டம்...