டெல்லி: அமெரிக்க பெண் சுற்றுலா பயணிகள் தனியாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அமெரிக்க பெண் சுற்றுலா பயணிகள் தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.