×

பட்டிவீரன்பட்டி அருகே பாலத்தில் ஏற்பட்ட அடைப்பால் சாலையில் ஆறாய் ஓடும் தண்ணீர்-சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

பட்டிவீரன்பட்டி : திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியிலிருந்து அய்யன்கோட்டை, புதூர் வழியாக சேவுகம்பட்டி செல்லும் ரோட்டில் சங்காரெட்டிகோட்டை பிரிவு அருகேயுள்ள பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய பாலமாகும். இந்த பாலத்தில் அடியில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக கண்மாய்களுக்கு செல்லும் மழைத்தண்ணீர் வீணாக ரோட்டில் செல்கின்றது. இதனால் இந்த ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து வருகின்றனர். சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலத்தில் உள்ள அடைப்பை சரிசெய்ய கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Battiwaranpanpani , Pattiviranapatti: Dindigul District, on the road from Pattiviranapatti to Ayyankottai via Sevugampatti via Puthur
× RELATED கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது