×

அரசியலுக்கு உதவாது பாஜ ஏமாற போகுது

வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் முக்கிய உறுப்பினரும், மகாராஷ்டிராவை சேர்ந்த ஷேத்காரி சங்காதனா விவசாய சங்க தலைவருமான அனில் கன்வாத் கூறுகையில், ‘‘வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவது துரதிருஷ்டவசமானது. இந்த அரசியல் நகர்வால், விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வரப் போவது இல்லை, உபி, பஞ்சாப் தேர்தலில் பாஜவுக்கு எந்த ஆதாயமும் கிடைக்கப் போவதில்லை. தேர்தல் வரை போராட்டத்தை விவசாயிகள் தொடருவார்கள். சட்டத்தை ரத்து செய்வதற்கு பதிலாக அரசு வேறு கொள்கைகளை தளர்த்தி இருக்கலாம்’’ என்றார். இந்த அமைப்பு வேளாண் சட்டத்திற்கு ஆதரவானது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : BJP , BJP, Election, Politics,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...