×

இனி ஜெயிச்சிடுவோம் பாஜ.வினர் நம்பிக்கை

வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசம், பஞ்சாப்பில் பாஜ கட்சிக்கு மீண்டும் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இவ்விரு மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், வேளாண் சட்டம் ரத்து மூலம் மேற்கு உபி.யில் பெரும்பான்மையினர்களான ஜாட் சமூக விவசாயிகளை சமாதானப்படுத்தி விடலாம் என பாஜ தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், பஞ்சாப்பில் ஒட்டு மொத்தமாக சீக்கியர்களின் ஆதரவை மீண்டும் பெற முடியும் என நம்புகின்றனர். அரியானாவிலும் ஆளும் பாஜ ஆட்சிக்கு ஏற்பட்ட களங்கத்திற்கு தீர்வு கிடைக்கும் என நம்புகின்றனர். கடந்த 2017ல் உபியில் 403 தொகுதிகளில் பாஜ 312 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடித்தது. 2014, 2019 மக்களவை தேர்தலிலும் எதிர்க்கட்சிகளை விரட்டி அடித்தது. அதேபோல், இந்த முறையும் ஆட்சியை பிடித்து விடலாம் என பாஜ கட்சியினர் தற்போது புதுத்தெம்பு அடைந்துள்ளனர்.

Tags : BJP , BJP, hope, election
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...