×

துப்பாக்கியை காட்டி வழிப்பறி: 2 பேர் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி மல்லிகைப்பூ காலனி 4வது தெருவை சேர்ந்த வடமலை (32), நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் வழியாக சென்றபோது, அவ்வழியாக வந்த 2 பேர், இவரை வழிமறித்து, துப்பாக்கி முனையில், ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். மேலும், அவ்வழியாக வந்த மேலும் சிலரையும் துப்பாக்கி முனையில் மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் எம்கேபி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, அந்த 2 பேரை மடக்கி பிடித்தனர்.

 விசாரணையில், வியாசர்பாடி பி.வி.காலனியை சேர்ந்த நிர்மல்குமார் (27), செங்குன்றத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (27) என்பதும், இவர்கள் தங்களிடமிருந்த டம்மி துப்பாக்கியை வைத்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் டம்மி துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : robbery , arrest
× RELATED லஞ்சம் வாங்கிய ஆய்வாளர்கள் கைது