சென்னை: முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை பலமாகவே உள்ளது என்று ஒன்றிய நீர்வளத்துறை ஆணையம் அறிக்கை அளித்துள்ளது. ஒன்றிய நீர்வளத்துறை ஆணையம் ஒப்புதல் அளித்த நீர் தேக்க அளவுப்படி அணை பராமரிக்கப்பட்டு வருகிறது என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.