×

கே.பி.அன்பழகன் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளது: லஞ்ச ஒழிப்பு போலீஸ் தகவல்

சென்னை: கே.பி.அன்பழகன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் முகாந்திரம் உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் ரூ.600 கோடி வரை சொத்து சேர்த்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. தனது பதவியை பயன்படுத்தி கே.பி.அன்பழகன் ரூ.800 கோடி மதிப்பிலான டெண்டரை, நண்பர்களுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது தருமபுரி மாவட்ட மோளையானூர் ஊராட்சி முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி புகார் தெரிவித்தார். தனது அதிகாரத்தை பயன்படுத்தி கே.பி.அன்பழகன் கோடிக்கணக்கான சொத்துக்களை சேர்த்துள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகார் தொடர்பாக ஆவணங்களை திரட்ட கால அவகாசம் தேவை என லஞ்ச ஒழிப்பு போலீஸ் கோரிக்கை வைத்துள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Tags : Andalakan , The complaint against KP Anpalagan has a clue: Anti-corruption police information
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...