×

ஏன் இந்தி மொழியை கற்கக் கூடாது? உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி

மதுரை: ஏன் இந்தி மொழியை கற்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மத்திய அரசின் திட்டங்களை தமிழில் மொழி பெயர்த்து அறிவிக்க கோரிய வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு மொழியை கற்பது பிறருடன் தொடர்பு கொள்ள தான் என நீதிபதிகள் கூறினர். மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது, மொழி மொழியாக கையாள வேண்டும் என கூறினர்.


Tags : Madurai Branch ,Court , Hindi, Language, Learn, Not, Judges, Question
× RELATED திண்டுக்கலில் பழமையான ஆலமரத்தை வெட்ட தடை