தென்பெண்ணையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
08:09 am Nov 19, 2021 |
தி.மலை: சாத்தனூர் அணையில் இருந்து 40,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணையாற்றின் கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.