×

திருவள்ளுர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள்: நவம்பர் 30 வரை நடைபெறுகிறது

திருவள்ளுர்: திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் வரும் 01.01.2022 ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல்களை சுருக்க முறையில் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. வருகின்ற 27, 28 ஆகிய இரண்டு சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 3657 வாக்குச் சாவடிகளில் உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து திரும்ப அளிக்கலாம்.

மேலும் நவம்பர் 30 ம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் சம்பந்தப்பட்ட வாக்குசாவடி அலுவலர்களிடம் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து திரும்ப அளிக்கலாம். வருகின்ற 05.01.2022 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 


Tags : Thiruvallur district , Tiruvallur, Voter List, Amendments
× RELATED திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில்...