புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் 2வது கிராமத்தை சீனா உருவாக்கி வருவதற்கான புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேசம் தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், அசல் கட்டுப்பாட்டு கோடு ஒட்டிய பகுதியில் அமைதியாக ஆக்கிரமிப்பு பணிகளை சீனா செய்து வருகிறது. இம்மாநில எல்லையில் 100 வீடுகளை கட்டி ஒரு கிராமத்தை சீனா முதலில் உருவாக்கியது. இது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது. இதை அமெரிக்காவும் உறுதி செய்தது.